For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!

11:43 AM Nov 09, 2023 IST | Student Reporter
காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது  போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்
Advertisement

சென்னையில் மது அருந்தி விட்டு ஓட்டியதால் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்து சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

சென்னை,  விருகம்பாக்கம் ரெட்டி தெரு சந்திப்பு பகுதியில் இன்று அதிகாலை மதுபோதையில் குபேந்திரன் என்பவர் இரு சக்கர வாகனத்தை  ஓட்டி சென்றார்.  இந்த நிலையில்  விருகம்பாக்கம் போலீசார்  குபேந்திரனை நிறுத்தி வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.  மேலும்  இரு சக்கர வாகனத்தை விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து மதுபோதையில் இருந்த குபேந்திரன் பைக்கை திருப்பி தரும்படி கேட்டு காவல் நிலையத்திற்கு சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிறகு காவல் நிலையத்தில் வெளியே காவலர் ஓய்வு அறையில் இருந்த காக்கிச்சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு அங்கு வெளியே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் குபேந்திரன் வெளியே தள்ளிக் கொண்டு சென்றார்.

இதையும் படியுங்கள்:உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த முழு விவரம் இங்கே!

பிறகு விருகம்பாக்கம் ரெட்டி தெரு சாலையில் நிறுத்திவிட்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை மடக்கி நான் விருகம்பாக்கம் போலீஸ் என்று கூறி மாமுல் வசூல் செய்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து விருகம்பாக்கம் காவல் துறையினர் சென்று குபேந்திரனை  கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement