For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
08:51 PM Aug 23, 2025 IST | Web Editor
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி
Advertisement

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சீமான், உடனடியாக வரலட்சுமியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த வரலட்சுமியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவியும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “மின்சாரத் துறையின் அலட்சியப் போக்கால்தான் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது வெறும் விபத்து அல்ல, அரசின் கவனக்குறைவு. ஒரு தூய்மைப் பணியாளரின் உயிர் பறிபோயிருக்கிறது. இதற்கு அரசு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க, மின்சாரத் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags :
Advertisement