For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு...

09:45 AM Jul 09, 2024 IST | Web Editor
ஜம்மு காஷ்மீர்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. முதலில் கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் அதன்பிறகு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையும் படியுங்கள் : தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி – கால்நடை மருத்துவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போதிலும், பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டின் வழியே தப்பிச் சென்றனர். மேலும், சில பகுதிகளில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தெரிகிறது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement