For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

07:56 PM Jul 31, 2024 IST | Web Editor
தொடர் கனமழை எதிரொலி   கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Advertisement

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக,  திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 219க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கனமழை காரணமாக நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து – எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

இதற்கிடையே, இன்றும் கேரள முழுக்க கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாளை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திருச்சூர், வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement