மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக்கிற்கு பிரிட்டனில் ’சாண்ட் மாஸ்டர்’ விருது!
உலக அளவிலோ, இந்திய அளவிலோ மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும்போது அதனை தனது மணற் சிற்பங்கள் மூலம் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்ப்பவர் மணற் சிற்ப கலைஞரான சுதர்ஸன் பட்நாயக். இந்தியாவில் மணல் சிற்பக் கலை பிறப்பதற்கும், பிரபலமாகுவதற்கும் காரணமாக இருந்தவர் இவர்தான். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சுதர்சன் பட்நாயக், 65-க்கும் மேற்பட்ட சர்வ தேச மணல் சிற்பத் திருவிழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் உலகப் புகழ்ùபற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக்கிற்கு பிரிட்டன் நாட்டில் 'ஃபிரெட்டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள டார்செட் மாவட்டத்தின் வேமத் பகுதியில் "2025, சர்வதேச மணல் சிற்பத் திருவிழா' கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞரான
சுதர்சன் பட்நாயக் பங்கேற்று, 10 அடி உயரத்திலான விநாயகர் மணல் சிற்பத்தை உருவாக்கினார். இதனைப் பாராட்டும் விதமாக திருவிழாவில் சுதர்சன்
பட்நாயக்கிற்கு "ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருது வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மூத்த மணல் சிற்பக் கலைஞர் ஃபிரெட் டாரிங்டனின்
நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் சுதர்சன் பட்நாயக்
இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.
"ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருது தொடர்பாக சுதர்சன் பட்நாயக் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது..
"ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருதைப் பெறும் முதல் இந்தியராக இருப்பதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன். உலக அமைதியை வலியுறுத்தும் விதமாக நான் அமைத்த விநாயகர் சிலைக்கு மரியாதை அளிக்கும் வகையில் இவ்விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
It’s a privilege to receive the 'Fred Darrington' British Sand Master Award at Sand World 2025, as a first Indian Sand Artist from Mr. Jon Orell, Mayor of Weymouth UK . During the International Sand Art Festval. pic.twitter.com/Xt7MTBIO3M
— Sudarsan Pattnaik (@sudarsansand) April 6, 2025