Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சட்டப்படி மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்" - அமைச்சர் ரகுபதி பேட்டி!

உச்சநீதிமன்றம் தற்போது மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
12:14 PM Jun 23, 2025 IST | Web Editor
உச்சநீதிமன்றம் தற்போது மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகள் தங்களது வேளாண் கருவிகளை பழுது நீக்கும் பராமரிப்பு தொடர்பான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

Advertisement

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, "இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்துககள் தான் அதிகம், ஆனால் இங்கு தேவை சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு தான், எந்த இந்துக்களை இங்கு வாழவிடவில்லை என்று பவன் கல்யாண் சொல்ல வேண்டும்.

ஆந்திராவில் வேண்டுமானால் அது போல் பிரச்சனை இருக்கலாம், தமிழகத்தில் அது போன்ற பிரச்சனைகள் இல்லை. ராமா ராமா என்று கோஷம் போட்டவர்களை இன்று முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திமுகவின் சாதனை. இந்து சமய அறநிலை துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களை இறந்திருக்காது.

அதிமுக என்ற பெயர் வைத்து கொள்வதற்கே தகுதியற்றவர்கள், திராவிடத்திற்கு எதிராகத்தான் இந்த மாநாட்டை அவர்கள் நடத்தி உள்ளனர். உச்சநீதிமன்றம் மணல் குவாரிகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளது, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்று விரையில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.

தமிழ்நாட்டில் ட்ரிபிள் இஞ்சின் சர்க்கார் எல்லாம் அமையாது ஒரே இஞ்சின் சர்க்கார் தான். இங்கு சிறுபான்மை மக்களுக்கு தான் பாதுகாப்பு வேண்டும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து, அதுதான் அரசியல் கடமை, அந்தக் கடமையை செய்கின்ற அரசு திமுக அரசு, அந்த கடமையிலிருந்து தவறுகின்ற அரசு மத்திய அரசு.

எந்த இந்துக்களை இங்கு வாழ விடவில்லை என்று அவர் சொல்லட்டும் பவன் கல்யாண் உள்ள ஆந்திராவில் வேண்டுமானால் அது போன்ற சம்பவம் நடந்திருக்கலாம் அதற்கு நாங்கள் பொறுப்பள்ள. பவன் கல்யாண் ஆந்திராவை போய் பார்க்கட்டும், தமிழ்நாட்டில் பவன் கல்யாண் தனது சொத்து வேலையெல்லாம் காண்பிக்க முடியாது, அதற்கு தகுந்த இடம் இது அல்ல.

வசனங்களைத்தான் அண்ணாமலை அந்த மாநாட்டில் உச்சரித்துள்ளாரே தவிர தமிழக மக்களின் மனநிலையை அவர் உச்சரிக்கவில்லை. நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக இருப்போமேயானால் இவர்கள் இன்று முருகவேசம் போட்டிருக்க முடியாது. ஆன்மீகம் இங்கு தலைத்திருக்கிறது என்ற காரணத்தினால் தான் தமிழ் கடவுள் முருகனை தமிழர்களின் இதயத்தில் ஏந்தி உள்ளார்கள். தமிழர்களுக்கு யார் வேஷம் போடுகிறார்கள் யார் உண்மையானவர்கள் என்பது நன்றாக தெரியும்.

அயோத்தியில் என்ன ஆச்சு, அங்கு இந்தியா கூட்டணியில் தான் வெற்றி பெற்றது, உத்திரபிரதேசம் என்ன ஆச்சு, ராமர் பிறந்த மண்ணிலே வென்றது இந்தியா கூட்டணி பாஜக அல்ல. 2026 தேர்தலுக்கும் நேற்று நடந்த கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் இந்துக்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கிருத்தவர்களாக இருந்தாலும் பௌத்தர்களாக இருந்தாலும் தங்கள் மனசாட்சி அவர்களுக்கு நன்றாக தெரியும். யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு யார் தமிழ்நாட்டை ஆண்டாள் அமைதியாக இருக்கும் யாரிடத்தில் அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் உணர்ந்து தமிழகத்தின் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இவர்களின் போலி வேடம் எடுபடாது.

2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதுவும் பிரிந்து போகாது. கூடுதல் தொகுதி கொடுப்பது என்பது பேச்சுவார்த்தையின் போது முதல்வர் முடிவெடுப்பார். எந்த குவாரி உரிமையாளர்களையும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யவில்லை அப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றோம்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தான் நிலவரி எல்லாம் போடப்பட்டுள்ளதை தவிர வேறு எந்த கட்டணமும் கூடுதலாக யாரிடமும் வசூலிக்கவில்லை. ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
DMKEPSMinister RaghupathiMKStalinPressMeetPudukottaisand quarries
Advertisement
Next Article