Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செங்கல்பட்டு அருகே பிரபல ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - காயமடைந்தவர் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்!

02:14 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

செங்கல்பட்டு அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி சத்யா படுகாயம் அடைந்தார்.  மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். 

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா.  இவர் மீது கொலை, கொலை முயற்சி,  வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  பிரபல ரவுடியான சீர்காழி சத்யா கடந்த 2021-ல் பாஜகவில் இணைந்தார்.  இவர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாமல்லபுரம் பகுதியில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த சீர்காழி சத்யாவை போலீசார் மடக்கி பிடித்தனர்.  அப்போது போலீசாரை தாக்கி விட்டு ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்ப முன்றனர்.  இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த சத்யா செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு,  ரவுடி சத்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
BJPEncounterPoliceRowdy SathyaStanley Hospital
Advertisement
Next Article