For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RoadAccident | விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்… சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு!

10:45 AM Sep 22, 2024 IST | Web Editor
 roadaccident   விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்… சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு
Advertisement

ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ். இவர்களது நண்பர் முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மணி. இவர்கள் மூவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த சூழலில், நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் இவர்கள் மூவரும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் ஆரணியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு திரும்பினர். இதில் சரண்ராஜ், ராஜேஷ் இருவரும் முள்ளிப்பட்டியில் உள்ள மணி என்பவரை வீட்டில் விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியது.

இந்த விபத்தில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த நிலையில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி கிராமிய போலீசார் உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement