For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா? - ராஜ்குமார் ஆனந்த் விளக்கம்!

04:44 PM Apr 11, 2024 IST | Web Editor
பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா    ராஜ்குமார் ஆனந்த் விளக்கம்
Advertisement

பாஜகவின் அழுத்தத்தாலேயே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் விலகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  

Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது. இறுதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 6 மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு, சஞ்சய் சிங்குக்கு சமீபத்தில் பிணை கிடைத்தது. ஆனால், மணீஷ் சிசோடியாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்னும் சிறையில்தான் உள்ளனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் இச்சூழலில், அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்குமார் ஆனந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து நேற்று வெளியேறினார். ஆம் ஆத்மியின் ஊழல் நடவடிக்கைகளால்தான் கட்சியில் இருந்து அவர் விலகியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து பாஜகவின் அழுத்தத்தினால்தான் அவர் கட்சியிலிருந்து விலகியதாக ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கட்சியின் கருத்துக்கு பதிலளித்த அவர்,

“அரசியல் மாறும் போது நாடு மாறும், என்று உருவான கட்சியில், அரசியல் மாறவில்லை. தலைவர்கள் தான் மாற ஆரம்பித்தனர். இதில் எனக்கு விருப்பமில்லை; கட்சியில் நடக்கும் அநீதியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் விலகினேன்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement