Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு... நாளை முதல் மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணி தொடரும்...

07:05 AM Feb 20, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசு முன்வைத்த பரிந்துரைகளை தங்களுக்கு சாதகமானதாக இல்லை என நிராகரித்த விவசாயிகள், நாளை (பிப். 21) காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம் பேரணியை மீண்டும் தொடங்குவோம் என்று கூறியுள்ளனர்.

Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் கடந்த பிப்.13 ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

இதனிடையே விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12 மற்றும் 16-ம் தேதிகளில் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுடன் தங்களது கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கங்கள் கடந்த பிப். 18 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் ஆகியோர் விவசாயிகள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு விவசாயிகளுக்கு சில முன்மொழிவுகளை அளித்தது. அதாவது, பருப்பு வகைகள், மக்கா சோளம், பருத்தி உள்ளிட்டவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் எனக் கூறியது. அதாவது விவசாயிகளின் பயிர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அளிக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று பியூஸ் கோயல் கூறினார்.

மத்திய அரசு முன்வைத்த திட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க விவசாயிகள் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு இருந்தனர். இந்நிலையில், மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். மத்திய அரசு முன்வைத்த பரிந்துரைகள் விவசாயிகளுக்கு சாதகமானதாக இல்லை என்று போராடும் விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக நாளை (பிப். 21) காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம் பேரணியை மீண்டும் தொடங்குவோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

Tags :
DelhiDelhi ChalofarmersharyanaMega MarchNews7Tamilnews7TamilUpdatesPoliceProtestsecurity
Advertisement
Next Article