For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்தான்”- அனிமல் புரமோஷன் நிகழ்ச்சியில் மகேஷ் பாபு பேச்சு!

09:24 PM Nov 28, 2023 IST | Web Editor
”இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்தான்”  அனிமல் புரமோஷன் நிகழ்ச்சியில் மகேஷ் பாபு பேச்சு
Advertisement

”இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்தான்” என தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு  அனிமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில்
இந்தியில் உருவாகியுள்ள படம் ‘அனிமல்’.  இப்படத்தை டி சீரியல் மற்றும் சினீ 1
ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும்
இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர்,
பாபி தியோல், பரினிதி சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர்.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியானது நவம்பர் 27 ஹைதராபாத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு, ரன்பீர் கபூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மகேஷ்பாபு,"ரன்பீரை பார்க்கும்போது நான் அவரது ரசிகன் எனக் கூறினேன். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது இந்த மேடையில் கூறுகிறேன். என்னைப் பொருத்தவரைக்கும் இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்தான். நான் அவரது ரசிகன்.

அனிமல் படம்தான் இதுவரை ரன்பீரின் படங்களிலேயே சிறந்த நடிப்பாக இருக்கும். அனிமல் டீசரை பார்த்து பைத்தியம் பிடித்து விட்டது. சந்தீப் ஒரிஜினலான இயக்குநர். பாபி தியோல் அட்டகாசமாக நடித்துள்ளார். படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்" என ரன்பீர் கபூரை புகழ்ந்தார்.

Tags :
Advertisement