For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதியன்று ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு

09:02 PM Apr 09, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதியன்று ரம்ஜான் கொண்டாடப்படும்    தலைமை காஜி அறிவிப்பு
Advertisement

தமிழகம், புதுவையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.

மேலும் ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரம்ஜான் மாதம் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் மாதம் தொடங்கியது. இந்நிலையில், இன்று(ஏப்ரல் 9) பிறை தென்படாததால் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 11 ஆம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

Tags :
Advertisement