For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராமநாதசுவாமி கோயில் கட்டண வசூல் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

கட்டண வசூல் உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
06:50 AM Jun 11, 2025 IST | Web Editor
கட்டண வசூல் உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதசுவாமி கோயில் கட்டண வசூல் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும்   எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது திமுக அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறவுறுத்தியிருப்பது. உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.

மேலும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement