Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜெபி நட்டா மாநிலங்களவை முன்னவராக நியமனம்!

08:22 PM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

மாநிலங்களவை முன்னவராக ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்பியாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாளை நடைபெறவுள்ளது.

இதனிடையே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்ட பியூஷ் கோயல், அதில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்ற நிலையில், அவர் வகித்த மாநிலங்களவை முன்னவர் பதவி நட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெபி நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்களவை முன்னவராக ஜெபி நட்டா நியமிக்கப்பட்டுள்ளதால், பியூஷ் கோயல் வகித்த அவை முன்னவர் பதவி, ஆளுங்கட்சியை மாநிலங்களவையில் தலைமையேற்று நடத்தும் பதவி, போன்றவற்றை ஜெபி நட்டாவே இனி வகிக்கவுள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக் காலம் கடந்த ஜனவரியிலேயே முடிவுக்கு வந்தாலும் லோக்சபா தேர்தலுக்காக ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

Tags :
BJPJP NaddaparliamentRajya sabha
Advertisement
Next Article