For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RainAlert | சென்னை உள்பட 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை!

03:34 PM Sep 30, 2024 IST | Web Editor
 rainalert   சென்னை உள்பட 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக காரணமாக தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,

"சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, தேனி ஆகிய 17 மாவங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அதவாது மாலை 05.40 மணி வரைஇடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது."

இவ்வாறு தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement