For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Rain Alert | குடையை மறக்கலையே? 24 மாவட்டங்களை குறிவைத்த மழை... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
07:49 AM Jun 09, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
rain alert   குடையை மறக்கலையே  24 மாவட்டங்களை குறிவைத்த மழை    லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க
Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி வருகிறது.

Advertisement

இதையும் படியுங்கள் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் | சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்!

இருப்பினும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே, சென்னையின் ஒருசில பகுதிகளில் நேற்று மாலை லேசான முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement