“ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை!” - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
08:18 PM Apr 01, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
                 Advertisement 
                
 
            
        டெல்லியில் பேசிய அவர், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று (31.03.2024) நடைபெற்ற ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் பேரணியில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
தேர்தலுக்கு முன் நீங்கள் எத்தனை கட்சிகளை கூட்டினாலும் மோடி மட்டுமே ஆட்சிக்கு வருவார். நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக ஏற்க நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். அடுத்த ஆட்சிக் காலத்தில் இந்தியா மூன்றவாது பெரிய பொருளாதாரமாக மாறும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜனநாயகம் பற்றி பேச உரிமை இல்லை.
 Next Article   
         
 
            