Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பஞ்சாபில் ரூ. 20,000 கோடி இழப்பு - பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கடிதம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
07:55 AM Sep 18, 2025 IST | Web Editor
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement

காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "கடும் மழையால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெல் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துள்ளன. பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

Advertisement

பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது நியாயமற்றது. இதனால் முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும், ஒவ்வொரு சிப்பாக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தியா அவர்களுடன் நிற்கிறது என்பதை நாம் உறுதியளிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு நாம் ஒன்றிணைந்து அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCongressLettermodiprime ministerPunjabRahul gandhi
Advertisement
Next Article