For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Pudukkottai | சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

11:34 AM Sep 25, 2024 IST | Web Editor
 pudukkottai   சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி   சினிமாவை மிஞ்சும் சம்பவம்
Advertisement

நமணசமுத்திரத்தில், சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் சாலையோரம் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது, அந்த காருக்குள் 2 பெண்கள், 3 ஆண்கள் என 5 பேர் சடலமாக இருப்பதைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, தடயவில் மற்றும் மருத்துவ நிபுணர்களை சம்ப இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள் : NEET விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!

பின்னர், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த 5 பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் குறித்த தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement