For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"குடும்பத்தில் ஒருவராக என்னை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி" - சூரி குறித்து நடிகர் புகழ் நெகிழ்ச்சி!

08:04 AM Feb 08, 2024 IST | Web Editor
 குடும்பத்தில் ஒருவராக என்னை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி    சூரி குறித்து நடிகர் புகழ் நெகிழ்ச்சி
Advertisement

 குடும்பத்தில் ஒருவராக தன்னை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது  என நடிகர் சூரி குறித்து சின்னத்திரை நடிகர் புகழ் 'Mr. Zoo keeper' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.

Advertisement

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சின்னத்திரை நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான வேடங்கள் போட்டு தனது நடிப்பால் அதிகமான ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், சின்னத்திரை புகழ், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947 படத்தில் புகழின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதையும் படியுங்கள் ; “இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்!” – தவெக செயற்குழு உறுப்பினர்களுக்கு விஜய் அறிவுரை!

நடிகர் சந்தானம், அருண் விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ள சின்னத்திரை நடிகர் புகழ், தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். 'Mr Zoo keeper' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கிராஃபிக்ஸ் பயன்படுத்தாமல் உண்மையான காட்டு விலங்குகளுடன் புகழ் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் எழுதி இயக்கியுள்ளார். J4 ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
காட்டில் இருந்து காணாமல் போன ஒரு புலி குட்டியை தேடும் வனத்துறை அதிகாரிகள், அந்த புலி குட்டியை வளர்க்கும் புகழ், அதனால் புகழின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள், அதை எப்படி புகழ் சமாளித்தார் என்பதே இந்த படத்தின் கதை.

இந்நிலையில், 'Mr Zoo keeper' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில், திரைப்படத்தின் கதாநாயகன் புகழ் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்துக்கொண்டார்.

இதையடுத்து, திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் கதாநாயகன் புகழ் மேடையில் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது;

"ஆரம்ப காலகட்டத்தில் பிரசாத் லாப் ஸ்டுடியோக்கு எதிரில் கார் கழுவிட்டு இருந்தேன். இப்போது,  இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கிராஃபிக்ஸ் பயன்படுத்தாமல் உண்மையான காட்டு விலங்குகளுடன் எடுத்துள்ளோம்.  தன் மீது நம்பிக்கை வைத்து  இவ்வளவு பணம் கொடுத்து திரைப்படத்தை எடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி.

மேலும், சூரி அண்ணனின் ஊர் திருவிழாவிற்கு சென்றபோது, அங்கு ‘எல்லாரும் ஒண்ணா நில்லுங்க, ஃபோட்டோ எடுக்கனும்’ என்று சொன்னபோது, என்னையும் அழைத்து புகைப்படம் எடுக்க நிற்க வைத்தார். என்னை அவரது குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி" இவ்வாறு  ‘Mr. Zoo Keeper’ பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான நடிகர் சூரி மேடையில்  பேசினார்.

நடிகர் சூரி மேடையில் கூறியாதாவது;

“சினிமாவில் ஜெயித்த நிறைய பேர் கஷ்டப்பட்டுதான் வந்திருக்கிறார்கள். நானும் அதே மாதிரி தான் வந்திருக்கிறேன்.தற்போதிய காலகட்டத்திற்கு அவசியமான திரைபடம் 'Mr Zoo keeper'. இந்த திரைபடம் வெற்றி பெற வாழ்த்துக்கள். திரைப்பட்டத்தின் கதாநாயகன் புகழ் இன்னும் நிறைய திரைபடங்கள் நடித்து உயர்ந்த இடத்தை அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும், அனைவரும் ஜெயிப்பது முக்கியம், ஆனால் அதை விட  அந்த வெற்றியில் நிலைப்பது ரொம்ப முக்கியம். மிருகங்கள் சரியாக தான் இருக்கிறது. நாம் தான் மிருகங்கள் இருக்கும் இடத்தை அபகரிக்கிரோம். மிருகங்களை பாதுகாப்பது ரொம்ப முக்கியம்"  இவ்வாறு நடிகர் சூரி பேசினார்.

Tags :
Advertisement