For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை - திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!

07:23 AM Jan 18, 2024 IST | Web Editor
பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை   திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதை தொடர்ந்து, நாளை (ஜன.19) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது,  இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.  இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜன.4-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இதையும் படியுங்கள்: டிரா… சூப்பர் ஓவர்.. வாக்குவாதம்.. – பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி.!

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து பின்னர் நாளை (ஜன.19) இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.  பின்னர் 20ஆம் தேதி காலை திருச்சி புறப்பட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் காலை 10:00 மணியில் இருந்து 10:30 மணி வரை சாமி தரிசனம் செய்கிறார்.

திருச்சியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.  இந்த நிலையில் நாளை (ஜன.19) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement