For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி.. வீரர்களுடன் கலந்துரையாடல்!

ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
01:42 PM May 13, 2025 IST | Web Editor
ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி   வீரர்களுடன் கலந்துரையாடல்
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

Advertisement

இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.

இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதனையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (மே 13) அதிகாலையில் பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்றார். அங்கு அவர் விமானப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

Tags :
Advertisement