For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாடு நிலச்சரிவு: ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!

12:51 PM Aug 10, 2024 IST | Web Editor
வயநாடு நிலச்சரிவு  ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். 

Advertisement

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன.

வீடுகள், கட்டடங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவை அங்கு இருந்தன என்பதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் இருந்து கேரளா மீண்டு வருவதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டின. பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. பல நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி வயநாடு பகுதியில் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என அப்போது அவர் உறுதி அளித்தார். உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து கேரளா அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.

கடந்த வாரமே மக்களவை எதிர்க்கட்சி ராகுல் காந்தி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags :
Advertisement