For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் - ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !

அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
07:21 AM Mar 06, 2025 IST | Web Editor
இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்   ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
Advertisement

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதங்களுக்கு பின் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1, 700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

Advertisement

இதற்கிடையே போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில், தங்களிடம் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
Advertisement