For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஜப்பான், ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை!

08:39 AM Apr 03, 2024 IST | Jeni
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்   ஜப்பான்  ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை
Advertisement

தைவான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைபேவின் கிழக்கு பகுதியான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாகவும், சுமார் 35 கி.மீ. ஆழத்தில் பதிவானதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து தைபேவின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹுவாலியனில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 1 மணி நேரத்திற்குள்ளாக 11 முறை நில-அதிர்வு உணரப்பட்டுள்ளது.தைவானில் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள் : இன்று மாலை வெளியாகிறது ‘சியான் 62’ பட அப்டேட்!

தைவானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் நாட்டின் கடலோரத்தில் அலைகள் உயரமாக எழும்பத் தொடங்கியுள்ளன. மியாகோ, யேயாமா தீவுகளிலும் அலைகள் உயரே எழுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் அலைகள் 3 மீட்டர் அளவு உயரக்கூடும் என்றும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஃபிலிப்பைன்ஸிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

Tags :
Advertisement