For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை நிறுத்தம் - வரி விதிப்பு காரணமாக இந்தியா அதிரடி!

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
07:45 PM Aug 23, 2025 IST | Web Editor
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை நிறுத்தம்   வரி விதிப்பு காரணமாக இந்தியா அதிரடி
Advertisement

Advertisement

இந்தியாவுக்குப் பாதகமான வர்த்தகக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா கடுமையான வரிகளை விதித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவும் அதிரடியாக வரி விதித்துள்ளது. இந்த வரிப் போர் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்காவுக்கு அஞ்சல் வழியாக ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரியை விதித்ததால், இந்த சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அஞ்சல் சேவை நிறுத்தப்பட்டால், சிறு வியாபாரிகள் மற்றும் தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, கைவினைப் பொருட்கள் மற்றும் சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு இது பெரிய பின்னடைவாக அமையும்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அஞ்சல் சேவை நிறுத்தம் தொடரும் என்றும், இது இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேலும் பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement