Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது!

05:22 PM Jun 15, 2024 IST | Web Editor
Advertisement

விருதுநகரில் மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (71). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் இவர் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டிக்கு அவரது மகள் லதா தினமும் உணவு கொடுத்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல தாயை பார்ப்பதற்காக லதா கடந்த 11-ம் தேதி சென்றார்.

அப்போது, தாய் வேலம்மாள் கண்கள், கழுத்து உள்ளிட்ட 14 இடங்களில் பேனாவால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த எந்த பொருளும் திருடப்படாத நிலையில், மர்மமான முறையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பது, அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள் : திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!

இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், மூதாட்டியை பேனாவால் 14 இடங்களில் குத்தி கொடூரமாக கொலை செய்த வழக்கில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜீவராஜன் (24) கைது செய்யபட்டுள்ளார்.

மது போதையில் மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது மூதாட்டி கத்தியதால் பேனாக்களால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியதாக குற்றவாளி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், கைதான இளைஞரின் தந்தை யோக முருகன் அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல்துறை சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
arresteddeath with a penPolicestabbedVirudhunagarwoman
Advertisement
Next Article