For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாமக- வின் 18வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியானது!

பாமக- வின் 18வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
03:15 PM Mar 01, 2025 IST | Web Editor
பாமக- வின் 18வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
பாமக  வின் 18வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியானது
Advertisement

பாமக சார்பில் வேளாண்மைக்கென தயாரிக்கப்பட்ட 18-ஆவது நிழல் நிதிநிலை அறிக்கையை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து வெளியிட்டார்.

Advertisement

பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில், 

“1. 2025-26ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினெட்டாம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.85,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.65,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும்.

2. பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும் என்றும் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

3. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி செலவிடப்படும்.  பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.

4. நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25% வேளாண்துறைக்கு அளிப்பதுதான் பாமகவின் நிலைபாடு என்று தெரிவிக்கப்பட்டிந்தது. அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும்

5. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும். மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் நேரடி மானியம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் உணவு மானியம் ஆகியவற்றைக் கடந்தும் கொள்முதல் வாரியத்திற்கு பெரும் செலவு ஏற்படும். அதை சமாளிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் கொள்முதல் மானியமாக ரூ.6,000 கோடி வழங்கப்படும்.

6. 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.

7. பருப்பு, எண்ணெய்வித்து உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டம்.  தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கித் தருவதற்காக தமிழ்நாடு வேளாண் திட்ட ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.

8 விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம், முடங்கும் அளவுக்கு காயமடைவோருக்கு ரூ.15 லட்சம், லேசான காயமடைவோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உழவு, நடவு, அறுவடை எந்திரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

9. . தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய புதிய பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கும்.மத்திய அரசால் வழங்கப்படும் உழவர் மூலதன மானிய திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 37.81 லட்சமாக குறைந்துவிட்டது. இதை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

10. தமிழ்நாட்டில் நெல் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து, உற்பத்தித் திறனை ஹெக்டேருக்கு 6 டன்னாக உயர்த்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். . வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

11. செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும். . தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் மலர் பயிர்கள் தரம் பிரிக்கப்பட்டு மதுரை, கோவை, திருச்சி, சென்னை விமான நிலையங்கள் மூலம் உடனடியாக துபாய், லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அடுத்த நாளே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

12 காவிரி தருமபுரி உபரிநீர்த் திட்டம், அரியலூர்: சோழர் பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்படும். தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,600இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும்.

13. ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் செயல்படுத்தப்படும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.

14. நடப்பாண்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் காவிரி - குண்டாறு இணைப்புப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம்.

15. மணல் குவாரிகள் மூடப்படும், தோட்டக்கலை பல்கலைக் கழகம்  அமைக்கப்பட்டு  தமிழ்நாட்டில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும். திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி அமைக்கபடும்

16 . தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை தமிழ்நாடு அரசே அதன் சொந்த செலவில் அகற்றித்தரும். காலி நிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் 400 பனை மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்த பின் ஒரு மரத்திற்கு ரூ.4,000 வீதம் ஒரு ஏக்கருக்கு இன்றைய மதிப்பில் ரூ.16 இலட்சம் வரை வருவாய் ஈட்டமுடியும்.

17 கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.20,000 கோடி மானியக் கடன். பால் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும். . மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்” உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

Tags :
Advertisement