For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்... முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் எவை?

பிளஸ் 2 தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்களை எவை? என்பதை பார்க்கலாம்.
10:33 AM May 08, 2025 IST | Web Editor
பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்    முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் எவை
Advertisement

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதியுடந் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். ஏப்ரல் 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி, அதாவது திட்டமிட்டதற்கு முன்கூட்டியே விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது.

Advertisement

இந்த நிலையில் இன்று (மே 8) +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்பே நிறைவு பெற்றதால் 1 நாள் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இதில், 7, 53,142 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 26,877 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒருவர் கூட ஆங்கிலத்தில் 100 / 100 மதிப்பெண் பெறவில்லை.

தனியார் சுயநிதி பள்ளிகள் 98.88 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. 91.44 சதவீதம் அரசு பள்ளிகள் தேர்ச்சி அடைந்துள்ளன. மாவட்ட வாரியான தேர்ச்சியில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 92 பள்ளிகளில் 58 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.  அரியலூரை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன.

மாவட்டங்களின் விவரம்,

அரியலூர் 98.32%

ஈரோடு 96.88%

திருப்பூர் 95.64%

கன்னியாகுமரி 95.06%

கடலூர் 94.99%.

Tags :
Advertisement