For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிளஸ் 1 ரிசல்ட் வெளியீடு... அதிகம் தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள் எவை?

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
09:48 AM May 16, 2025 IST | Web Editor
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பிளஸ் 1 ரிசல்ட் வெளியீடு    அதிகம் தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள் எவை
Advertisement

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8.08 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியானது. அதில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே இன்று (மே 16) வெளியானது. இத்தேர்வை 8,71,239 பேர் எழுதிய நிலையில் 817.261 (93.80%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,07,098 மாணவர்கள் எழுதிய நிலையில் அதில் 7,43,232 (92.09%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவியர் 4,03,949 (95.13 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,39,283 (88.70 %) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.43 % மாணவியர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

அரியலூர் - 97.76%
ஈரோடு - 96.97%
விருதுநகர் - 96.23%
கோயம்புத்தூர் - 95.77%
தூத்துக்குடி - 95.07%

Tags :
Advertisement