Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்னி பேருந்தில் பயங்கர #FireAccident - உயிர் தப்பித்த 30 பயணிகள்!

07:46 AM Aug 23, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 30 பேரும் உயிர்த்தப்பினர்.

Advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி  30 பயணிகளுடன்  தனியார் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மன்னார்புரம் அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் பேருந்தின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. அதிலிருந்து புகை ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேருந்தின் பின்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுநர் பேருந்தை மேம்பாலத்தின் மீது சாலையோரமாக நிறுத்திவிட்டு, பேருந்தில் இருந்த 30 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கி உள்ளார். லேசாக எரிந்த தீ படிப்படியாக அதிகரித்து போருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

இதையும் படியுங்கள் : 2 இணைப்புகள் கொண்ட வீட்டுகள் : புதிய நடைமுறையில் கணக்கிடப்படும் – #TANGEDGO தகவல்!

இந்நிலையில், சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் சுமார் 2.40 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தின் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. பின்னர், மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags :
Chennaifireaccidentomni buspassengersTrichyTuticorin
Advertisement
Next Article