For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் - மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வி!

04:40 PM Aug 08, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக்   மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வியைத் தழுவினார்.

Advertisement

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் ஹெலன் மரூலிஸை எதிர்கொண்டார். இதில் அமெரிக்க வீராங்களை ஹெலன் மரூலிஸ் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டார்.  தொடர்ந்து, இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக், அமெரிக்க வீராங்கனையான ஹெலனிடம் 2-7 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று வெளியேறினார்.

Tags :
Advertisement