For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி | காசோலைகளை வழங்கி வாழ்த்தினார் முதலமைச்சர் #MKStalin!

10:55 AM Sep 25, 2024 IST | Web Editor
பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற வீரர்  வீராங்கனைகளுக்கு ரூ 5 கோடி   காசோலைகளை வழங்கி வாழ்த்தினார் முதலமைச்சர்  mkstalin
Advertisement

பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மணிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் 2023-24-ம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு பரிசுத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டித் தேர்வு மூலம் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், வழங்கினார்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags :
Advertisement