For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெகுவிமரிசையாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிகட்டு... 14 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு!

05:55 PM Jan 16, 2024 IST | Web Editor
வெகுவிமரிசையாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிகட்டு    14 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு
Advertisement

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பெற்றார்.

Advertisement

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். மாவட்ட  ஆட்சியர் சங்கீதா, எம்.பி. வெங்கடேசன், எம்எல்ஏ பூமிநாதன் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனைக்கு பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்களின் உறுதி மொழி ஏற்புக்கு பிறகு ஜல்லிக்கட்டு துவங்கியது. சுமார் 900 காளைகள் பரிசோதனைக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டது. 35 காளைகள் நிராகரிக்கப்பட்டன. இதே போன்று ஜல்லிக்கட்டு போட்டியில் வீரமுடன் காளைகளை தழுவிய வீரர்களில் 16 பேர் காயமடைந்தனர். மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர் காயமடைந்தனர்.

இதே போன்று பார்வையாளர்கள் 17 பேரும், காவல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர், காவல் சார்பு ஆய்வாளர், துணை காவல்கண்காணிப்பாளர் உள்பட மூவரும் காயமடைந்தனர். இதன்படி மொத்தமாக 46 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டியில், பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் (B 85) 14 மாடுகள் பிடித்து முதல் இடத்தை தட்டிச்சென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் (Y 18) 10 மாடுகள் பிடித்து இரண்டாவது பரிசை பெற்றார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது. கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன் ( R - 113) 8 மாடுகள் பிடித்து மூன்றாவது இடம் பெற்றார்.

Tags :
Advertisement