For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்!

01:37 PM Nov 20, 2023 IST | Web Editor
தமிழ்நாடு  புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்
Advertisement

தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணாமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில், வரும் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்றைய தினங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!

தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர்,  ராணிப்பேட்டை,  வேலூர்,  திருவண்ணாமலை, திருப்பத்தூர்,  ஈரோடு,  சேலம்,  தருமபுரி,  நீலகிரி,  கோயம்புத்தூர்,  திருப்பூர்,  தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement