Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மணப்பாறையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கம் - கொட்டும் மழையிலும் தவித்த பயணிகள்!

11:43 AM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து, 35
சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சு
வார்த்தையில் தீர்வு காணப்படாத சுழலில், திட்டமிட்டப்படி இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது. திமுகவை சேர்ந்த எல்.பி.எஃப் தொழிற்சங்க தொழிலாளர்கள் மட்டும் தற்போது பணிபுரிந்து வருகிறார்கள்.

மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து தினசரியாக  32 நகரப் பேருந்துகளும்,  44 புறநகர் பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில்,  இன்று தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக 8 நகர
பேருந்தும்,  9 புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் மணப்பாறையில் 35 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால்,  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள்,  வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் என பலரும் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். மேலும், மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags :
AITUCCITUmanapparaiNews7Tamilnews7TamilUpdatesstrikeTamilNaduTNGovtTNSTCTransportStrikeTrichy
Advertisement
Next Article