For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
10:14 AM Mar 14, 2025 IST | Web Editor
 புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்    அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.

Advertisement

அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

"கடந்தாண்டு கலைஞர் கனவு இல்லம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2030-க்கும் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்தாண்டு ஒரு லட்சம் வீடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தாண்டும் புதிதாக மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும். இதற்காக ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், ஊரகப் பகுதிகளில் பழுதான வீடுகளுக்கு பதிலாக புதிதாக 25,000 வீடுகள் இந்தாண்டு கட்டித் தரப்படும்"

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Tags :
Advertisement