For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

10மணி நேரமாக விரட்ட முயற்சித்த அதிகாரிகள் - ஆனந்த குளியலிட்டு அடம்பிடித்த யானை!

07:33 PM Aug 26, 2024 IST | Web Editor
10மணி நேரமாக விரட்ட முயற்சித்த அதிகாரிகள்   ஆனந்த குளியலிட்டு அடம்பிடித்த யானை
Advertisement

தென்காசி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையை விரட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வந்த நிலையில், அந்த யானை குளத்தில் ஆளந்த குளியல் போட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்தது. 

Advertisement

தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியில்  யானை ஒன்று இன்று காலை 6 மணியளவில் முகாமிட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் யானையை விரட்ட பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தத நிலையில், மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க முயற்சி செய்தனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை அடுத்து அதிகாரிகள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இருப்பினும் அதிகாரிகள் முகாமிட்டிருக்கும் பகுதிக்கு மிக அருகாமையில் வந்த யானை குளத்து நீரில் ஆனந்த குளியல் போட்டது. அந்த யானை சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக ஆனந்த குளியல் போட்டு மீண்டும் குளத்தில் உள்ள புதருக்குள் சென்று பதுங்கி கொண்டது. வனத்துறையினர் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக யானையை விரட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement