For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Erode கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தடைந்தது.
03:38 PM Jan 17, 2025 IST | Web Editor
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தடைந்தது.
 erode கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர் அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.இந்த சூழலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு வேட்பு மனுத் தாக்ல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. பிப்.5- ம் தேதி நடைபெறும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement