For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது - அதிபர் டொனால்ட் டிரம்ப்!

வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
08:04 AM Aug 09, 2025 IST | Web Editor
வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது   அதிபர் டொனால்ட் டிரம்ப்
Advertisement

இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனிடையே முதற்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்த நிலையில் மேலும் 25 சதவீத வரி விதிப்பு 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த சூழ்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, “வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களில் ஸ்மார்ட்​போன்​, கணினி, மருந்துகள், சில வகை உலோகங்​கள், கனிமங்​களுக்கு 50 சதவீத வரி​வி​திப்​பில் இருந்து விலக்கு அளிக்​கப்​பட்டுள்ளது. இதன்​படி இந்​தி​யாவில் தயாரிக்​கப்​படும் ஆப்​பிள் போன் உள்​ளிட்​ட​வற்​றுக்கு கூடு​தல் வரி விதிக்​கப்​ப​டாது. எனினும் அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் இந்​தி​யா​வின் ஜவுளி, நகைகள், வைரங்​கள் ஏற்​றுமதி பாதிக்​கப்​படும் என்று கூறப்படுகிறது.

Tags :
Advertisement