For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எந்த கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியாது” - திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

எந்த கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியாது என திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்
04:32 PM Jun 01, 2025 IST | Web Editor
எந்த கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியாது என திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்
“எந்த கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியாது”   திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு க  ஸ்டாலின் சூளுரை
Advertisement

மதுரை ஊத்தங்குடியில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி.கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “வியூகம் அமைக்கவும் வெற்றியை நோக்கி உழைக்கவும் இந்த பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம். திமுகவுக்காக உழைத்த பலரின் தியாக பூமியான இந்த மதுரையில் பொதுக்குழு நடப்பதை பெருமையாக கருதுகிறேன். இது மதுரையில் திமுகவின் 7வது பொதுக்குழு. 7வது முறை திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக இந்த பொதுக்குழு உள்ளது. சித்திரை திருவிழா நடக்கும் நகரில் திமுகவின் முத்திரை திருவிழாவாக இந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

திமுக வழக்கமான அரசியல் கட்சி அல்ல, வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள் வரும் போகும். ஆனால் கொள்கைக்காக தோன்றி, இலட்சியத்திறாக தியாகம் செய்து மக்களின் ஆதவரைப் பெற்ற இயக்கும் திமுக. இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநில கட்சியாக நம்முடைய இயக்கம் ஆட்சியை பிடித்தது. எல்லோரும் எல்லாம், சமூகநீதி என இனத்துக்கான உரிமை குரல் எழுப்பியது நாம். கொள்கையை வென்றெடுக்க ஆட்சி தேவை என உழைப்பவர்கள் நாம். தரமான கொள்கை கூட்டம் நாம். அதனால்தான் எந்த கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது.

நான் தொடக்கத்தில் சொன்னதுபோல் இது வழக்கமான பொதுக்குழு அல்ல 7வது முறையாக வாகை சூடவுள்ள பொதுக்குழு. அடுத்தாண்டு இதே நேரத்தில் என்ன 7வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது, ஸ்டாலின் தலையில் 2வது முறையாக திமுக ஆட்சி தொடர்கிறது என்ற தலைப்பு செய்தி வரும். இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதற்குத்தான் இந்த பொதுக்குழு. நான் மமதையில் பேசுகிறவன் அல்ல, கண்ணுக்கு எட்டியவரை எதிரிகள் இல்லை என ஆணவத்தில் சொல்கிறவன் அல்ல. எந்த காலத்திலும் எனக்கு அது வராது. என்னைப்பொறுத்தவரை பணிவுதான் தலைமை பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரியது. வரலாறு காணாத வெற்றியடைவோம் என சொல்வது உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்.

சூரியன் நிரத்தரமானது அதே போல் திமுக-வும் நிரந்தரமானது. நம் ஆட்சியும் நிரந்தரனாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். உருவாக்கு முடியும். இன்று நாம் அனுபவிக்கு சோதனையும் நெருக்கடியும் சாதாரணது அல்ல. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியைப்போல் சோதனைகளும் நெருக்கடிகளும் தொடர்ந்து வருகிறது. முதலமைச்சராக நான் இருந்தாலும் போராட வேண்டியுள்ளது. இது தமிழ்நாட்டு நலனுக்காக நடக்கும் போராட்டம். அரசியல் எதிரிகள் ஒருபக்கம் கொள்கை எதிரிகள் மறுபக்கம் இணை எதிகள் இன்னொரு பக்கம். துரோகிகள் அடுத்தப் பக்கம் என எல்லா பக்கமும் எதிரிகள். இதற்கிடையில் கட்சியையும் ஆட்சியையும் நடத்தும் பொறுப்பு என் தோழில் சுமத்தப்பட்டுள்ளது.

அவதூறு, பொய்கள் மூலம் நம்மை வீழ்த்த பார்க்கிறார்கள். அதற்கு சமூக ஊடகத்தை பயன்படுத்துகிறார்கள். திமுகவுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி திமுக மேல்தான் அதிக விமர்சனங்கள் வரும். திமுக ஆதரவாளர்கள் கூட சில நேரம் எதிரிகளால் பரப்பப்படும் போலி தகவல்களை நம்பி, அவர்கள் நம்மை தாக்கும் நிலையை இன்றைக்கும் சமூக ஊடகங்களில் நாம் பார்க்கிறோம். ஆனால், உண்மை என்னவென்றால் மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான அலையைவிட ஆதரவு அலைதான் வீசுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியில் அதள பாதாளத்திற்கு செல்லவிருந்த தமிழ்நாட்டை மீட்டிருக்கோம். மத்திய அரசு நம் ஒருமைகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகளை கடந்து மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறோம் . பொருளாதாரா, அரசியல், ஆளுநர் போன்ற முட்டுக்கட்டைகளை பாஜக அரசு போட்டாலும் அதைக் கடந்து இந்தியாவின் வளர்ச்சியடைந்த நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம்.

2026 தேர்தலுக்கு சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால் வழக்கத்திற்கு அதிகமாக திமுக ஆட்சிக்கு எதிராக அவதூறு அம்புகளை எதிராலிகள் வீசுவார்கள். கருத்துக்கணிப்பில் புதிதாக வருபவர்களுக்கு அதிகமான வாக்கு சதவீதத்தை போட்டு, மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள். சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்ற பச்சை பொய்யை சமூக ஊடங்கள் மூலம் விதைப்பார்கள். அதை முறியடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா அறிவித்தபோது அவருக்கு அருகில் இபிஎஸ் அமைதியாக அமர்ந்திருந்தார் . கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள் தானே கூட்டணி குறித்து அறிவிப்பார்கள். ஆனால் அங்கே அமித்ஷா அறிவித்தார். பாஜகவின் Control-க்கு அதிமுக போயுள்ளதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். புதிதாக சிலர் நாங்கள்தான் மாற்று என இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் நாம் பதிலடி கொடுக்க வேண்டும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement