For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்துக்களின் வழிபாடுகளில் இடையூறு - முற்றுப்புள்ளி வைக்கும் கடமை அரசுடையது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!

04:14 PM Jan 21, 2024 IST | Web Editor
இந்துக்களின் வழிபாடுகளில் இடையூறு   முற்றுப்புள்ளி வைக்கும் கடமை அரசுடையது  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
Advertisement

இந்துக்களின் வழிபாட்டு முறையில், இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழ்நாடு முழுவதிலிருந்து வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை அரசுடையது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அன்னதானம் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள் : “உண்மைக்குப் புறம்பான செய்தியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புவது வருத்தத்துக்குரியது” – அமைச்சர் சேகர்பாபு!

அதில், “அயோத்தியில் நாளை நடைபெற உள்ள ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை” என கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள பதிவில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு பதிவிக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், "அமைச்சர் சேகர் பாபு, உங்கள் tweet க்கு பதில்கொடுக்கும் வகையிலே தரவுடன்/ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள். இந்துக்களின் வழிபாட்டு முறையில், மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை TN முழுவதிலிருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது.

சின்ன சின்ன தனியார் கோயிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கேயிருந்து அநாவசிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆதலால், அமைச்சர், இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக  முன்நின்று காப்பற்ற வேண்டும். தடையில்லையேல், தங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள்"  என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement