For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

6 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நீலகிரி மலை ரயில் சேவை!

07:49 AM Aug 07, 2024 IST | Web Editor
6 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நீலகிரி மலை ரயில் சேவை
Advertisement

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலைரயில் சேவை ஆறு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. 

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து - மேட்டுப்பாளையம் வரை மலைரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.

இருப்பினும் மழைகாலங்களில் இந்த மலைரயில் ரத்தாவது வழக்கமாகி வருகிறது. காரணம், மழைகாலங்களில் மலைகளிலுருந்து மண்சரிவது, கனமழையால் மரங்கள் விழுவது என தண்டாவளங்கள் சேதமடைகின்றன. இதனால் அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் நீலகிரியில் பெய்த கனமழையால்  ஹில்கிரோ - ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே  இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவுற்றதால், இன்று முதல் மலைரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது.

Tags :
Advertisement