For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுமண தம்பதி வெட்டிக் கொலை - ஒருவர் கைது; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

07:08 AM Nov 03, 2023 IST | Jeni
புதுமண தம்பதி வெட்டிக் கொலை   ஒருவர் கைது  குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
Advertisement

தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார். இவரது மகன் மாரி செல்வம்(23), ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரம் செய்து வரும்
முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா(21) என்பவரை வசந்தகுமார் காதலித்து
வந்துள்ளார்.

மாரி செல்வம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என்பதால், இவர்களது காதலுக்கு கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கமும், அவரது உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 3-நாட்களுக்கு முன்னர், கார்த்திகா தனது வீட்டை விட்டு வெளியேறி மாரி செல்வத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர், முத்துராமலிங்கமும் அவருடன் சிலரும் முருகேசன் நகரில் உள்ள மாரி செல்வத்தின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மாரி செல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரையும் 3 இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் நுழைந்து சராமரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. திருமணம் ஆகி 3 நாட்களே ஆன நிலையில், புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : உலகக்கோப்பை 2023 : நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலையில் ஈடுபட்டது கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் என்பதும், அவர் ஆட்களை வைத்து கொலை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தப்பிச்சென்ற ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement