For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம்... தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
10:32 AM Mar 14, 2025 IST | Web Editor
சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம்    தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.

Advertisement

அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “சென்னை வேளச்சேரி பிரதான சாலை முதல் குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு ரூ.310 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement