For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய - வங்கதேச எல்லையை கண்காணிக்க புதிய குழு நியமனம்!

04:04 PM Aug 09, 2024 IST | Web Editor
இந்திய   வங்கதேச எல்லையை கண்காணிக்க புதிய குழு நியமனம்
Advertisement

வங்கதேசத்தில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா - வங்கதேச எல்லையை கண்காணிக்க உயர்மட்ட குழுவை இந்தியா அமைத்துள்ளது. 

Advertisement

வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நேற்று(ஆக. 8) இரவு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில் இந்தியா - வங்கதேச எல்லையை கண்காணிக்க உயர்மட்ட குழுவை இந்தியா அமைத்துள்ளது. இந்திய-வங்கதேச எல்லையை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை(கிழக்கு) கூடுதல் இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தெற்கு வங்காளம், திரிபுரா பகுதியின் எல்லை பாதுகாப்புப் படைத் தலைவர், இந்திய துறைமுக ஆணையத்தின் செயலாளர் மற்றும் திட்ட வளர்ச்சிக்குழுவின் உறுப்பினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வங்கதேசத்தில் உள்ள அதிகாரிகளுடன் இந்த குழு தொடர்பில் இருக்கும் என்றும் எல்லையில் உள்ள பாதுகாப்பை இந்த குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த குழுவின் மூலமாக வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.

Tags :
Advertisement