For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்த அமைச்சர் சாமிநாதன்..!

05:34 PM Jan 25, 2024 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்த அமைச்சர் சாமிநாதன்
Advertisement

 நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள் ;“கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் நேரில் பார்வையிட்டு செய்தியாளர் நேச பிரபுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் உறவினர்களிடம் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளரகளை சந்தித்த  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது..

"பல்லடம் பகுதியைசேர்ந்த நேசபிரபு நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேற்றிரவு ஒரு சில நபர்களால் தாக்கப்பட்டு கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேசபிரபு நலமோடு இருக்கிறார். மேலும், உடல்நலம் நல்ல முறையில் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மீது மீதான தாக்குதல் கடுமையாக இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். உரிய நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் ரவி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து விசாரணை நடத்தபட்டு வருகிறது. இந்த தகவலை கேட்ட முதலமைச்சர் மன வருத்தம் அடைந்திருக்கிறார். மேலும், முதலைச்சர் முதற்கட்டமாக 3 லட்சம் நிதியை வழங்கி இருக்கிறார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

Tags :
Advertisement