For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

" நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்குதல் : சிகிச்சைக்கான முழு செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

04:13 PM Jan 25, 2024 IST | Web Editor
  நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்குதல்   சிகிச்சைக்கான முழு செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்     மத்திய இணையமைச்சர் எல் முருகன்
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்த நிலையில், நேரில் சென்று செய்தியாளர் நேச பிரபுவை சந்தித்தார்.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள் ;“கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபுவை சந்திக்க கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து. இதனைத்தொடர்ந்து, மத்திய இணை எல்.முருகன் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"பல்லடத்தில் செய்தியாளர் நேசப்பிரபு மிக கொடுமையாக தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை கைது செய்ய அரசு துரிதமாக நடவடிக்கக எடுக்க வேண்டும். காவல்துறையிடம் உதவி கேட்டும் உதவி செய்யவில்லை. காவல்துறையின் மெத்தனபோக்கு காவல்துறை அதிகாரியின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகத்துறையில் உள்ள நபருக்கே பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவி வருகிறது.

காவல்துறையின் உதவி கிடைத்திருந்தால், அவர் வீட்டில் இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமயோகிதாமாக செயல்பட்டு அவர் தனது குடும்பத்தை காக்க வெளியேறி இருக்கிறார். சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் டாஸ்மாக் பார்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக தாக்கப்பட்டிருக்கிறார். காவல்துறையிடம் உதவி கேட்டும் முறையாக பாதுகாப்பு கொடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு முதல் தகவலறிக்கை தாமதமாக போடுள்ளது. சிகிச்சைக்கான முழு செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.மேலும், செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது, நேச பிரபு விரைவில் பூரண குணம் அடைய வேண்டும்"

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags :
Advertisement