Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை ரவுடி கொலை வழக்கு: 4 பேர் கைது!

09:42 AM May 24, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லையில் ரவுடி தீபக் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

திருநெல்வேலி மாநகரத்தின் எல்லை பகுதியான கே டி சி நகரில் அமைந்துள்ள பிரபல
உணவகம் முன்பு கடந்த 20 ஆம் தேதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் பிரபல ரவுடி தீபக் ராஜா மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல்துறை உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி நடந்தது.  அதனுடன் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையாளர் ஆதர்ஸ் பச்சோரா தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்தது.  இந்த நிலையில்,  இந்த வழக்கு தொடர்பாக முத்து சரவணன், ஐயப்பன், தம்பன் மற்றும் ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது (SC/ST act) வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்ப்டடுள்ளது.  மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தலை மறைவாக உள்ள சிலரை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ArrestDeepak RajaNellaipalayamkottaiPoliceRowdy
Advertisement
Next Article