For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெல்லை ஆணவப்படுகொலை - கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
08:15 AM Aug 01, 2025 IST | Web Editor
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை ஆணவப்படுகொலை   கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார்.

Advertisement

இதையறிந்த அவரின் சகோதரரான சுர்ஜித்(20), அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி கே.டி.சி நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் இதுவரை சுர்ஜித் மற்றும் அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவம் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி தமிழக அரசு மாற்றி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இன்று வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி கொலை நடைபெற்ற நிகழ்வு இடத்திலிருந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவரோஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில் இதுவரை இந்த கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் மற்றும் அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுளளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினின் உறவினர்கள் கொலையாளியின் சகோதரி மற்றும் தாய் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உடலை பெறாமல் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், 5 நாட்களுக்கு பின் கவினின் உடலை பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்று காலை 9 மணிக்கு கவினின் தந்தை சந்திரசேகரிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.

Tags :
Advertisement